காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று ராஜினாமா செய்தார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸின் பிரச்சாரக் குழுத் தலைவர் பதவியிலிருந்தும், அரசியல் விவகாரக் குழுவிலிருந்தும் குலாம் நபி ஆசாத் ராஜினாமா சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தார். உடல்நிலையை காரணம் காட்டி அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினாலும், காங்கிரஸ் தலைமை மீது அவர் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது கட்சியினர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகி கட்சிக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
முன்னதாக, வீழ்ந்து கிடைக்கும் காங்கிரஸை மீட்டுக் கொண்டு வர, கட்சியில் உடனடி சீர்திருத்தம் தேவை என வலியுறுத்தி கட்சி தலைமைக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்கள் கொண்ட குழுவில் இவரும் அங்கம் வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…