தனது கல்லறையில் ஒரு பெரிய ஆணுறுப்பை நிறுவ வேண்டும் என்பதை கடைசி ஆசையாக கூறிய பாட்டியின் ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ளனர். மெக்சிகோவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மெக்சிகோவைச் சேர்ந்தவர் கேத்ரினா ஆர்டுனா பெரெஸ். ஆணுறுப்பு மீது மிகுந்த ஈர்ப்பு கொண்ட இந்த பாட்டி, தனது 99 வயதில் கடந்த 2021 ஜனவரியில் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பு, தனது குடும்பத்தினரிடம், தனது கல்லறையில் மிகப்பெரிய ஆணுறுப்பு ஒன்றை சிலையாக வடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனவரி 20,2021இல் அவர் இறந்துவிட்ட நிலையில், பாட்டியின் குடும்பத்தினர் தற்போது 5 அடி உயரத்தில் ஆணுறுப்பு ஒன்றை 600 பவுண்டுகள் எடையில் அவரது கல்லறையில் நிறுவியுள்ளனர்.
ஆணுறுப்பு மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக, அந்த பாட்டி அவரது கிராமத்தினர் டோனா கேட்டா என்று அழைக்கப்பட்டார்.
இந்த சிலையை உருவாக்கிய பொறியாளர், முதலில் இதை ஒரு ஜோக் என நினைத்தாலும், மறைந்த பாட்டியின் குடும்பம் இதை உருவாக்குவதில் பிடிவாதமாக இருந்த பிறகு, சிற்பிகள், தச்சர்கள், செதுக்குபவர்கள் மற்றும் சாண்டர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து, அதில் வேலை செய்யத் தொடங்கி ஒரு மாதத்தில் அதை முடித்துள்ளார்.
என்னதான் இது வைரலாகி ஒருபக்கம் மெக்சிகன்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், ஒரு கல்லறையின் மேல் ஒரு பெரிய ஆணுறுப்பைக் காண்பிப்பதில் மகிழ்ச்சியடையாத அந்நாட்டு பழமைவாதிகள் இதை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கனு கமெண்டில் சொல்லுங்க.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…