ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் அறுவடை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் கவலை தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 150வது நாளை கடந்து இன்னும் உக்கிரமாக நடந்து வருகிறது. போர் காரணமாக உக்ரைனின் உள்கட்டமைப்பு முழுவதும் சேதமடைந்துள்ளது. ராணுவ நிலைகளை குறிவைத்து ரஷ்யா தொடர் துல்லிய தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தான் உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐநா கவலை தெரிவித்தது.
அதனைதொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளதாவது; இந்த ஆண்டு நாட்டின் அறுவடை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது மற்றும் ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் இரண்டு மடங்கு குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகியவை உக்ரைனின் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க துருக்கி மற்றும் ஐ.நா.வுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…