Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

கோர விபத்தில் இளைஞர் பலி.. சோகத்தில் நண்பன் எடுத்த விபரீத முடிவு!!

Sekar November 13, 2022 & 11:54 [IST]
கோர விபத்தில் இளைஞர் பலி.. சோகத்தில் நண்பன் எடுத்த விபரீத முடிவு!!Representative Image.

இருசக்கர வாகனத்தில் சென்றபோது தன்னுடன் வந்த நண்பன் உயிரிழந்த சோகத்தில் இருந்த இளைஞர் ஒருவர் குற்ற உணர்ச்சியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ மெக்கானிக்கல் 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரபு என்பவர் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக சென்றுள்ளனர். சீனிவாசனுக்குச் சொந்தமான அந்த வாகத்தை பிரபு ஓட்டிச் சென்றதாக தெரிகிறது.

வாகனம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பின்னால் அமர்ந்து பயணித்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வாகனத்தை ஓட்டி சென்ற பிரபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். 

அவர் மீட்கப்பட்டு செஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நண்பன் சீனிவாசன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபு, அதற்கு தான் தான் காரணம் என எண்ணி வேதனையில், கூர்மையான ஆயுதத்தால் தன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

இதனால் உறவினர்கள் பதறிப்போன நிலையில், செஞ்சி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கி பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

எனினும் நண்பன் இறந்தது குறித்தும், நண்பன் இறப்புக்கு தானே காரணம் என நினைத்து தொடர்ந்து மனவேதனையில் இருந்த பிரபு, நேற்று அதிகாலை அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பிரபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நண்பன் உயிரிழந்த துக்கம் தாளாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்