எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைவர் என்பதை கூட சொல்ல முடியாதை நிலையில்தான் அவர்கள் உள்ளதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.
சென்னை: மா.பொ.சிவஞானத்தின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுதந்திர போராட்ட வீரர், தமிழுக்கு பாடுபட்டவர் மா.பொ.சி., க்கு மரியாதை செலுத்துவதை தமகா பெருமையான கருதுகிறது. இன்னும் தமிழகத்தில் கள்ளச்சாரயம் தொழிற்சலை நடந்துகொண்டு இருக்கிறது.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவோரை தமிழக அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சியின் கூட்டணி ஒரு முடிவில்லா தொடராகதான் இருக்கப்போகிறது.
இந்தியாவை தலைமை தாங்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அவர்கள் சொல்ல முடியவில்லை, அதே போல அந்த கூட்டணிக்கு தலைவர் கூட சொல்ல முடியாத நிலையில் தான் அந்த கூட்டணி இருக்கிறது என்று தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…