Rain Update : டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று இரவு கனமழை பெய்தது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட சில வடமாநிலங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெப்பம் தணிந்துள்ளது. அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத், நொய்டா ஆகிய நகரங்களில் கனமழை கொட்டியது.
அதேபோல், டெல்லி மற்றும் அரியானாவில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி மிதமான மழை பெய்துள்ளது. iதனால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…