Digilocker App : இந்தியாவில் கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் உட்பட பல முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்கும் விதமாக டிஜிலாக்கர் என்ற செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அச்செயலி வழங்கும் சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே மக்கள் பெற முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்த மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீரான நிா்வாகத்தை உறுதிசெய்யும் நோக்கில் அரசின் சேவை வழங்கும் செயலியில் பான் கார்டு, ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், சிபிஎஸ்இ பொதுத்தோ்வு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் வடிவில் சேகரித்துக் கொள்ளலாம்.
மேலும், இந்த சேவையை வாட்ஸ்ஆப் மூலம் பெற 9013151515 என்ற எண்ணுக்கு ‘Hi' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்தால் அரசின் சேவைகளை மக்கள் எளிதில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…