சென்னை: செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டார்.இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் செய்தியார்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. இதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…