Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தாய்லாந்தில் மோசமான கும்பலிடம்...சிக்கி தவிக்கும் தமிழர்கள்...வெளியிட்ட ஆடியோவால் பதற்றம்!

Priyanka Hochumin September 21, 2022 & 12:45 [IST]
தாய்லாந்தில் மோசமான கும்பலிடம்...சிக்கி தவிக்கும் தமிழர்கள்...வெளியிட்ட ஆடியோவால் பதற்றம்!Representative Image.

நம் நாட்டில் வேலையின்மை காரணமாக மற்ற நாடுகளுக்கு வேலை தேடி செல்லும் மக்கள் பல இடங்களில் சிக்கி தவிக்கும் செய்தி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்படியாக தாய்லாந்திற்கு கடந்த மே மாதம் வேலைக்காக அழைத்துச்செல்லப்பட்ட 13 தமிழர்கள் உடன் சேர்த்து மொத்தம் 16 இந்தியர்கள் அங்கு மாட்டிக்கொண்டனர். அந்நாட்டின் சமூக விரோத கும்பல் இவர்களை சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்த முயற்சித்துள்ளது. அதற்கு மறுப்பு தெரிவித்த நம் நாடு மக்களை அவர்கள் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த கும்பல் இதுமட்டும் இல்லாது மியான்மரில் இருந்த இந்தியர்கள் சிலரையும் தாய்லாந்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர்கள் தாய்லாந்த ராணுவத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றம் அவர்களுக்கு அபராதம் விதி, தாய்லாந்து குடியேற்றப் பிரிவின் தடுப்பு முகாமில் தங்கவைத்துள்ளது.

எனவே, அந்த கும்பலில் மாட்டிக்கொண்ட தமிழர்களில் ஒருவர் தங்களின் நிலையில் உறவினர்களிடம் தெரிவிக்கும் வகையில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தாங்கள் மாட்டிக்கொண்டதாகவும், தமிழக முதல்வரும் மத்திய வெளியுறவுத் துறையும் உதவ வேண்டும் என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் இதுவே இறுதி தகவலாகவும் இருக்கலாம் என்று மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்து என்ன முடிவு எடுக்கப்படும் என்று பார்க்கலாம்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்