2002 குஜராத் கலவரம் தொடர்பாக தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்பி ஸ்ரீகுமார் அகமதாபாத் குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2002 குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் தலைவர் எஹ்சான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, முன்னாள் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் 60க்கும் மேற்பட்ட மூத்த மாநில அதிகாரிகள் மீது சுமத்திய பெரிய சதி குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்த ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. பொய்யான தகவல்களை அளித்ததாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்பி ஸ்ரீகுமாரை குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
2002 குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்பி ஸ்ரீகுமார் மற்றும் டீஸ்டா செடல்வாட் ஆகியோர் மீது குஜராத் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஜாகியா ஜாஃப்ரி மூலம், நீதிமன்றத்தில் பல மனுக்களை வைத்து, எஸ்ஐடி தலைவர் மற்றும் பிறருக்கு தவறான தகவல்களை அளித்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, மும்பையில் வைத்து குஜராத் காவல்துறையின் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு டீஸ்டா செடல்வாட்டையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…