ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என பிரதமர் மோடி கூறியதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகிக்கொள்கிறேன் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் டீசல் விலையை இன்னும் 30 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் அவ்வாறு குறைக்கவில்லை என்றல் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் உண்ணாவிரம் இருப்போம் என கூறியுள்ளார்.
மே மாதம் வரையிலான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்தது. ஆனால் பிரதமர் பங்கேற்ற விழாவில் பேசிய முதல்வர், ஏற்கெனவே 14,000 கோடி பாக்கி உள்ளதாக கூறியுள்ளார். முதல்வர் சரியான புள்ளி விவரத்தை தெரிந்துகொள்ளவில்லையா? அல்லது அவருக்கு எழுதிக் கொடுத்தவர்களுக்கு தெரிய வில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செழுதோம் என பிரதம மோடி கூறியதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். அவ்வாறு மோடி கூறியதை அமைச்சர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் , இல்லையென்றால் பெரியகருப்பன் அமைச்சர் பதவியில் இருந்து விளக்குவார். அப்படி விலகவில்லை என்றால் அவரது வீட்டின் முன் நின்று போராடவேண்டி இருக்கும் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…