Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜெயிலுக்கு சுற்றுலா.. வெறும் 500 ரூபாயில்.. எந்த மாநிலத்தில் தெரியுமா?

Sekar September 28, 2022 & 17:22 [IST]
ஜெயிலுக்கு சுற்றுலா.. வெறும் 500 ரூபாயில்.. எந்த மாநிலத்தில் தெரியுமா?Representative Image.

உத்தரகாண்டின் ஹல்த்வானி சிறைச்சாலையின் கைவிடப்பட்ட பகுதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஒருவருக்கு சிறை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வது ஹல்த்வானி சிறையில் இப்போது சாத்தியமாகும். ஹல்த்வானி சிறைச்சாலையின் பழைய பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு உண்மையான சிறை உணர்வை அளிக்கும் வகையில் தங்குமிட வசதியாக மாற்ற உத்தரகாண்ட் காவல்துறை செயல்பட்டு வருகிறது.

ஹல்த்வானி சிறை, 100 ஆண்டுகள் பழமையானது. 1903ல் கட்டப்பட்டது. பராமரிப்பு இல்லாமல் இருந்த, சிறையின் ஒரு பகுதியும், ஆறு ஊழியர் குடியிருப்புகளும் இப்போது சிறை விருந்தினர்களை வரவேற்கத் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதன் படி உங்களுக்கு சிறை அனுபவம் வேண்டுமானால் ரூ.500 செலுத்தினால் போதும். ஹல்த்வானி சிறையில் அதை அனுபவிக்கலாம்.

தெலுங்கானாவிலும் சிறைச்சாலையில் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் 500 ரூபாய்க்கு கைதிகளின் வாழ்க்கையை வாழ அனுமதிக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் அமைந்துள்ள சன்ஹாரெட்டி மாவட்ட மத்திய சிறையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிறை சுற்றுலா வசதி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்