துணை போலீஸ் சூப்பிரண்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.
ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில், சட்டவிரோத சுரங்க மாபியா குறித்து விசாரிக்க சென்ற டாரு டிஎஸ்பி சுரேந்திர சிங் பிஷ், சுரங்க மாபியா கும்பலால் டிரக் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், "பொறுக்க முடியாது. தகவலறிந்த உடன் டி.ஜி.பி.யிடம் பேசினேன். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒவ்வொரு குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்" என்று கூறினார்.
மேலும் டிஎஸ்பி குடும்பத்திற்கு வங்கியிலிருந்து ரூ.50 லட்சமும், அரசு தரப்பில் இருந்து ரூ.50 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என அனில் விஜ் உறுதியளித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…