சமூகவலைத்தளத்தில் வெறுப்பு பதிவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பேஸ்புக்கில் 53ஆயிரம் வெறுப்புப்பதிவுகள் கண்டறியப்பட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தை காட்டிலும் 385 அதிகம் என தெரிவித்துளளது. மார்ச் மாதத்தில் 38,600 வெறுப்பு பதிவுகள் கணடறியப்பட்டதாக மெட்டா கூறியுள்ளது.
பேஸ்புக்கை போல இன்ஸ்டாகிராமில் வெறுப்பு பதிவுகள் 86% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 41,300 வெறுப்புப்பதிவுகள் கண்டறியப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத்தில் அது 77 ஆயிரமாக அதிகரித்துள்ளது என மெட்டா தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான பதிவுகள், பயனாளர்கள் புகார் அளிப்பதற்கு முன்பாகவே கண்டறியப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வெறுப்புப் பதிவுகள் அதிகம் புழங்கும் சமூக வலைதளங்களாக உள்ளன. வெறுப்புப் பதிவுகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…