மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பஸ் ஓட்டுநர்க்கு ஏற்பட்ட மாரடைப்பால் 2 உயிரிழப்பு ஏற்பட்டது. நிலையாக சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென ஏற்படுத்திய விபத்து இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று மாநகர பேருந்து வழக்கம்போல் செயல்பட்டு கொண்டிருந்தது, கோஹல்பூர் காவல் நிலைய பகுதி வழியாக செல்லும்போது திடீரென பேருந்தின் ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாதையை விட்டு விலகி சிக்கெனலில் இருந்த வாகனங்கள் மீது மோத ஆரம்பித்தது. மேலும், இரு சக்கர வாகனங்களை இழுத்து கொண்டு சென்று சாலையில் நின்றது.
சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களையும், பஸ் ஓட்டுநரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மாரடைப்பு காரணமாக டிரைவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…