தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை மறுநாள் தேர்வுகள் தொடங்க உள்ளன.
இந்த தேர்வுகள் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று தொடங்கி, ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…