Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

Priyanka Hochumin Updated:
19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!Representative Image.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல் படி, இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களில் வாய்ப்பு உள்ளது. எந்தெந்த மாவட்டங்கள் மற்றும் எதனால் மழைக்கு வாய்ப்பு குறித்து முழு விவரத்தையும் இந்த பதிவில் பாப்போம்.

மழைக்கு காரணம்: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

23.04.2023 - இதன் காரணமாக தமிழகத்தின் 19 மாவட்டங்களின் இன்று மிதமான முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதிபட்சம் வெப்பநிலை - இன்று [23.04.2023] தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்