Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

13 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு..! சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

Saraswathi Updated:
13 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு..! சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!Representative Image.

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்துவந்த கோடை வெயிலுக்கு விடுதலை கொடுக்கும் வகையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான வானிலை நிலவத்தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

தலைநகர் சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்துவருவதால், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில்,  சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.  இதேபோல்,  திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்