தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டர கிராமங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும், செவிலிமேடு, ஓரிக்கை, பூக்கடைசத்திரம், வெள்ளை கேட், பொன்னேரிகரை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.
மேலும், காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டர பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…