சென்னை: மேற்கு திசையின் காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதியின் ஒருசில இடங்களில் மழைப் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளக் குறிப்பில், காற்றின் வேகமாறுபாடு காரணமாக 29 மற்றும் 30ஆம் தேதிகளில் சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் ஜூலை 1 மற்றும் 2ஆம் தேதிகளில் காரைக்கால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைப்பெய்யக் கூடும். 3ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைப் பெய்யக்கூடும். நீலகிரி, கோவை,திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24மணி நேரத்திற்கு ஓரளவிற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 36-37டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28டிகிரி செல்சியஸை ஓட்டியே இருக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…