சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 44வது உலக செஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கவில்லை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிகளை தொடங்கிவைக்க இந்திய பிரதமர் மோடி தற்போதுஅகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில் சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்கள், கோயம்பேடு மாா்க்கெட், புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் 4 கூடுதல் காவல் ஆணையா்கள், 8 இணை ஆணையா்கள், 29 துணை ஆணையா்கள், 80 உதவி ஆணையா்கள் ஈடுபடுகின்றனா்.
அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், பிரதமா் செல்லும் சாலையை சோதனையிடுகின்றனா். சென்னையில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…