காத்மாண்ட்: நேபாளத்தில் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற 9என்எம்வி ஹெலிகாப்டர் இன்று(ஜூலை 11) மாயமானது. காலை 10.12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. 5 வெளிநாட்டு பயணிகள் மற்றும் ஹெலிகாப்டர் கேப்டன் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்நிலையில் ஹெலிகாப்டர், எவரெஸ்ட் சிகரத்தின் அருகே மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…