Traffic rule : தமிழகத்தில் இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பின்னிருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர்க்கு ஹெல்மெட் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து, சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டும் இல்லமால் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய விதி நாளை முதல் அமலுக்கு வருவதாகவும், இதற்கான விழிப்புணர்வு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…