தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி கோரியதில், தமிழகத்தில் குறிப்பிட்ட 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கியது. ஆனால், தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் பேரணி நடத்த தற்போதைய சூழ்நிலையில் வழங்க முடியாது என பதிலளித்தது.
இதனையடுத்து, நடந்த பல்வேறு தரப்பிற்குப் பின்னர், சூழல் வேறுவிதமாக மாறியது. இதில், 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டம் நடத்துவதாக இருந்தால் அனுமதி கொடுக்கலாம். 24 இடங்களில் அனுமதி கொடுக்க முடியாது. மேலும், நவம்பர் 6 ஆம் நாள் வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, நீதிபதி இளந்திரையன் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்காத 47 இடங்களில் உளவுத் துறை ஆராய்ந்த பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அருமனை ஆகிய 6 இடங்களில் RSS பேரணி நடத்த அனுமதி இல்லை. இந்த 6 இடங்களைத் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உட்பட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…