Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு.. இரட்டை சிசுக்களுடன் கர்ப்பிணி பலி!!

Sekar November 04, 2022 & 13:25 [IST]
மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு.. இரட்டை சிசுக்களுடன் கர்ப்பிணி பலி!!Representative Image.

கர்ப்பிணி ஒருவர் பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் ஆதார் அட்டை இல்லாததால் திருப்பி அனுப்பியதால் அந்த பெண் மற்றும் அவரது இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி கஸ்தூரி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பணியிலிருந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் ஆதார் அட்டை மற்றும் மாநில அரசின் தாய் அட்டை இல்லாததால் திருப்பி அனுப்பிவிட்டனர் 
 
இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு செல்ல அவரிடம் போதிய பணம் இல்லாததால் வீட்டுக்கு திரும்பி வந்த நிலையில், கஸ்தூரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நிலையில், வீட்டிலேயே கஸ்தூரி மற்றும் அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிகிறது.
 
கர்நாடக மாநிலத்தில் இரட்டை குழந்தைகளுடன் பலியான கஸ்தூரி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும், தும்குருவில் வாடகை வீட்டில் 7 வயது மகளுடன் வசித்து வந்ததும், இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே கஸ்தூரி மற்றும் இரட்டை சிசுக்கள் பலியான சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்க ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கஸ்தூரியின் இறப்புக்கு காரணமான மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கஸ்தூரியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்