அம்பேத்கருக்கு காவி உடை, குங்குமம், விபூதி அணிவித்து அவரது நினைவு நாளில் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த 6ஆம் தேதி கும்பகோணத்தில் அம்பேத்கர் காவி சட்டை அணிந்தவாறும், நெற்றியில் விபூதி குங்குமம் வைத்தவாறும் இந்து மக்கள் கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சியின் செயலாளர் குருமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
இன்று இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் அவரது திரு உருவப்படம் காவி சட்டை அணிந்தவாறும், நெற்றியில் விபூதி குங்குமம் வைத்த வாறும், இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்டது .
இதனை அடுத்து சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சியின் செயலாளர் குருமூர்த்தி கைது செய்யப்பட்டார். இவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார் .
இந்நிலையில் இன்று குருமூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதனை அடுத்து கும்பகோணம் கிளை சிறையில் இருந்த குருமூர்த்தி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…