எடப்பாடியை நீக்கி விட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவைக் காப்பாற்றுவோம் என அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவிற்கு அதற்கு துணை நின்ற டி.டி.வி தினகரனுக்கும் துரோகம் செய்தவர் வைத்தியலிங்கம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் ஓ.பி.எஸ் அணியின் சார்பில் அவரால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்வில் வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய வைத்தியலிங்கம் அவசரப்பட்டு பதவி ஆசை பிடித்த எடப்பாடி பழனிச்சாமி அரசியல் வனவாசம் போவார் என்றும் சின்னம்மா காலில் விழுந்து பதவி வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிற்கும், அதற்கு துணை நின்ற டி.டி.வி தினகரனுக்கு துரோகம் செய்தவர் என்றார்.
மேலும் தொண்டர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்க வேண்டும் அதை நீக்க பொதுக்குழுவிற்கும் செயற்குழுவிற்கும் அதிகாரம் இல்லை ஒன்றாக இணைந்தால் நாம் நினைப்பது தான் நடக்கும், யாரும் பயப்பட வேண்டாம். ஊராட்சி செயலாளர் பதவியை காலி செய்தது எடப்பாடி பழனிச்சாமி என்றும் 10 நாட்களுக்குள் மாவட்ட செயலாளர்கள் அந்தந்தப் பகுதியில் ஊராட்சி செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறியவர், எடப்பாடியை நீக்கி விட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவைக் காப்பாற்றுவோம் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…