பங்களாதேஷின் ஜெனைடாவில் உள்ள ஒரு இந்து கோவிலில் உள்ள ஒரு தெய்வத்தின் சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவில் சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேஷில் ஜெனைடா எனும் பகுதியில் உள்ள தௌடியா கிராமத்தில் உள்ள காளி கோயிலின் அதிகாரிகள் நேற்று காலை சிலை துண்டு துண்டாக உடைக்கப்பட்டதைக் கண்டனர். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இரவில் மறைமுகமாக கோயிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் சிலையை சேதப்படுத்தியதோடு, கோயிலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சாலையில் சிலையின் தலையை வீசிவிட்டு சென்றுள்ளது தெரியவந்தது.
பங்களாதேஷில் 10 நாள் வருடாந்திர துர்கா பூஜை விழாக்கள் விஜயதசமி அல்லது தசராவின் புனித நாளில் சிலைகளை மூழ்கடித்து ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பங்களாதேஷில் கோவிலில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி, டாக்காவில் உள்ள இஸ்கான் ராதாகந்தா ஜீவ் கோவில் உடைக்கப்பட்டு சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் பல பக்தர்களும் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…