பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் மேற்கொள்ளவுள்ள பாதயாத்திரைப் பயணத்தைத் தொடங்கி வைப்பதற்கான உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29ம் தேதி தமிழகம் வருகிறார்.
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, அண்மையில் திமுகவின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழகத்தில் ஆளும் திமுகவின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்துவரும் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் மாநிலம் தழுவிய நடைபயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, வரும் 29ம் தேதி ராமநாதபுரத்தில் தமது பாதயாத்திரைப் பயணத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கவுள்ளார். இதை தொடங்கி வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா அன்றைய தினம் ராமேஸ்வரம் வரவுள்ளதாக இராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணிமுருகேசன் தெரிவித்துள்ளார். மேலும், உள்துறை அமித்ஷா பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும், பாதயாத்திரைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…