Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பயங்கரவாத தாக்குதல் அதிகரிப்பு....உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை...!

madhankumar June 03, 2022 & 13:22 [IST]
பயங்கரவாத தாக்குதல் அதிகரிப்பு....உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை...!Representative Image.

காஷ்மீரில் கடந்த 31ஆம் தேதி பண்டிட் சமூகத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து நேற்று காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார் என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

பண்டிட்கள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது தொடர்பாக பல நகரங்களில் பண்டிட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளால் அதிகரித்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க அமித் ஷா தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இன்று நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் லெப்டினட் கவர்னர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகன் அஜித் தோவல், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, துணை ராணுவ படையின் உயர் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சிவில் நிர்வாகம் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்