தேர்வுக்காக கட்டணம் தர மறுத்த தந்தையை அடித்து கொன்று 6 துண்டுகளாக வெட்டிய மகன் கைது செய்யப்பட்டார்.
கோவத்திலும் ஆத்திரத்திலும் கொலை செய்து விட்டு உடல்களை புதைத்து எரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலமாக கொலை செய்து விட்டு மாட்ட கூடாது என்று உடல்களை கூறாக வெட்டி அகற்றும் சம்பவங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து கொண்டிருந்த தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய ஷ்ரத்தாவை கொன்று 35 துண்டுகளாக வெட்டிய அஃதாப் கைது செய்யப்பட்டார். நாட்டை உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை.
அடுத்ததாக உத்திரபிரதேசத்தில் முன்னாள் காதலியை 6 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதனை தொடர்ந்து மேற்குவங்காள மாநிலத்தில் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் தனது சொந்த மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து முழு விவரமும் இதோ.
முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் சக்கர போர்த்தி சமீப காலமாக தன்னுடைய மனைவி மற்றும் மகனை தொடர்ந்து அடித்து சித்ரவதை செய்துள்ளார். இருப்பினும் அவரின் கொடுமைகளை சகித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இவரின் மகன் பாலிடெக்னிக் படித்து வருகிறார். சம்பவத்தன்று தன்னுடைய தேர்வுக்காக பணம் கட்ட தன்னுடைய தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால் தந்தை தர மறுத்துவிட்டார், இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. மகங்கோபாத்தில் தந்தையை தள்ளிவிட அவர் அருகில் இருந்த நாற்காலி மீது மோதி கீழே விழுந்துவிட்டார்.
பின்னர் தன்னுடைய தந்தையின் கழுத்தை நெறித்து கொடூரமாக கொன்றுவிட்டார். கொலை செய்து விட்டு மாட்டிக்கொள்ளாமல் இருக்க தந்தையின் உடலை பாத்துரூமில் வைத்து 6 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடத்தில் புதைத்து விட்டார். பிறகு சந்தேகம் வர கூடாது என்று தந்தையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணை செய்யும் போது போலீசாருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது. இந்த கொலை செய்த போர்த்தியுடன் மகன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…