Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொடூரத்தின் உச்சம்; பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு! 

KANIMOZHI Updated:
கொடூரத்தின் உச்சம்; பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு! Representative Image.

புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் வேங்கை வயல் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை அரசு தலைமை  மருத்துவமனையில் அந்த ஊர் மக்கள் பயன்படுத்தும் தண்ணீரை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். 

அப்போது குடிநீரில் மனிதகழிவுகள் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பட்டியலின மக்கள் பயன்படுத்தும்  குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த இழிவு சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம்  உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது புகார் அளித்துள்ள காமராஜின் ஆறு வயது மகள் கடந்த 24ம் தேதி இந்த மேல்நிலை நீர் கேட்க தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை குடித்ததால் உடல்நிலை குறைவு ஏற்பட்டு தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழகத்தில் சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட கொடூரங்களின் உச்சமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்