சென்னை: எம்பிபிஎஸ் படிப்புக்கான தேசிய அளவிலான பொது கலந்தாய்வை நடத்துவதற்கு தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் 187வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தேசிய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்களுக்கு முன்னிரிமை இருக்காது.
தமிழகத்தில் அதிகளவு மருத்துவ இடங்கள் உள்ளது. இந்த பொது கலந்தாய்வு மூலம் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மற்ற மாநில மாணவர்களுக்கு இடம் கிடைத்து விடும். ஆகையால் தமிழக அரசு இதை கடுமையாக எதிர்க்கும் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…