பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்ய கட்சியைச் சேர்ந்தவருமான சினேகன் நடிகை ஜெயலட்சுமி மீது நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் கடந்த 2015ம் ஆண்டு சினேகம் பவுண்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். ஆனால் கடந்த சில நாட்களாக இணையதளத்தில் சினேகம் பவுண்டேசன் பெயரில் மோசடிகள் நடைபெற்று வருவதாக கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான ஜெயலட்சுமி எனது சினேகம் அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் என்னிடம் தெரிவித்தனர். இது குறித்து எனது வழக்கறிஞர் மூலமாக ஜெயலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பினேன். இருப்பினும் முகவரி தவறாக இருந்ததால் அது திரும்பி வந்து விட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது திரையுலகைச் சேர்ந்தவர்களையும், பா.ஜ.க., மக்கள் நீதி மய்யம் கட்சியினரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது குறித்து நடிகை ஜெயலட்சுமி கூறும் போது, ‘‘நான் சமாதானம் பேச யாரையும் நேரில் அழைக்கவில்லை. காபி சாப்பிடலாம், டீ சாப்பிடலாம் என்று நான் யாரையும் கூப்பிடவில்லை. சினேகன் கட்சி ஆதாயத்திற்காக என் மீது இப்படியொரு பழியை சுமத்துகிறார். சினேகம் என்ற பெயரில் அவர் அறக்கட்டளை வைத்து நடத்துவது இப்போது தான் எனக்கே தெரியும். நானும் சினேகம் என்ற பெயரில் தான் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். இதில் லட்சக்கணக்கில் எல்லாம் பணப்பரிவர்த்தனை நடக்கவில்லை. எந்த மோசடியும், தவறான செயல்களும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும் சினேகனை முன் பின் பார்த்தது கூட இல்லை, அவர் நடத்தும் பெயரில் தான் நானும் சினேகம் என்ற அறக்கட்டளை நடத்துகிறேன் என தற்போது தான் எனக்கு தெரியும். நான் எந்த குற்றமும் செய்யவில்லை, அவர் என் மீதான குற்றத்தை நிரூபித்தால் நான் பாஜகவை விட்டு விலகுகிறேன் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…