தெருநாய்களுக்குத் தொடர்ந்து உணவளிக்கும் நபர்களே அந்நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்குப் பொறுப்பாவார்கள் என்றும், அந்த நாய்கள் மக்களைத் தாக்கினால், அதற்கான செலவையும் உணவளிக்கும் நபர்களே ஏற்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்களின் பாதுகாப்புக்கும் விலங்குகளின் உரிமைகளுக்கும் இடையே சமநிலை பேணப்பட வேண்டும் என்று கூறியதோடு, இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் கூறியுள்ளது.
தெருநாய் பிரச்சினைக்கு பகுத்தறிவு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை செப்டம்பர் 28 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்து, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தங்கள் தரப்பு பதில்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
இந்தியாவில் 1.5 கோடி நாய் கடி வழக்குகள்
2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.5 கோடி நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 27,52,218 வழக்குகளும், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (20,70,921 வழக்குகள்), மகாராஷ்டிரா (15,75,606 வழக்குகள்) மற்றும் மேற்கு வங்கத்தில் (12,09,232 வழக்குகள்) பதிவாகியுள்ளன. மறுபுறம், லட்சத்தீவில் இதே காலகட்டத்தில் நாய் கடி பூஜ்ஜிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
2019 ஆம் ஆண்டில் 72,77,523 நாய் கடி வழக்குகள் காணப்பட்டன. இது 2020 இல் 46,33,493 ஆகவும், 2021இல் 17,01,133 ஆகவும் குறைந்துள்ளது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 14.5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தமிழ்நாட்டில் (251,510) மற்றும் மகாராஷ்டிராவில் (231,531) பதிவாகியுள்ளன. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட ரேபிஸ் வழக்குகள் மற்றும் இறப்புகளைப் பதிவு செய்கிறது.
இருப்பினும், வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களை விட தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகம். 2019 கணக்கின்படி, இந்தியாவில் 1,53,09,355 தெருநாய்கள் இருந்தன. இது 2022 இல் 1,71,38,349 ஆகக் குறைந்துள்ளது. உத்தரப் பிரதேசம் (20,59,261), ஒடிசா (17,34,399) மற்றும் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்கள் காணப்படுகின்றன. (12,76,399) மணிப்பூர், லட்சத்தீவு மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய இடங்களில் தெருநாய்கள் இல்லை
குறிப்பாக கேரளா மற்றும் மும்பையில் ஆபத்தாக மாறியுள்ள தெருநாய்களை கொல்வது தொடர்பாக பல்வேறு குடிமை அமைப்புகள் பிறப்பித்த உத்தரவுகள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட மனுதாரர்கள், மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் கேரள உயர்நீதிமன்றம் உள்ளிட்ட சில உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எதிர்த்து, நகராட்சி அதிகாரிகளை விதிகளின்படி தெருநாய்களின் அச்சுறுத்தலை சமாளிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…