பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் சித்தராமையாவை பாஜக எம்எல்ஏ பாராட்டி பேசியுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காகிநெலே மகா சமஸ்தானம் மடம் சார்பில் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முதல்வர் சித்தராமையா, பாஜக எம்எல்ஏ டி.கே சோம சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில், பாஜக எம்எல்ஏ டி.கே சோம சேகர் பேசியதாவது:
எனது தொகுதியில் காகிநெலே மடம் அமைவது எனக்கு பெருமையாகும். 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்த சித்தராமையா எனது யஸ்வந்த்பூர் தொகுதிக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். இதன் காரணமாக பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்தேன் இதனால் தற்போது இரண்டாவது முறையாக யஸ்வந்த்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.
அரசியலில் நான் வேறு கட்சிக்கு சென்றாலும் சித்தராமையாவை மறக்கவில்லை. அவர் எப்போதும் சொல்வதை செய்யக்கூடியவர். விரோத அரசியலை செய்யாமல் எப்போதும் ஏழை மக்களுக்கு நன்மைகள் செய்து வருகிறார். மக்களின் நாடித்துடிப்பு என்ன என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.
எனது தொகுதிக்கு அவர் இரண்டாவது முறையாக வந்துள்ளார். அது சிஷ்யனாக நான் அவரை வரவேற்கிறேன். இந்த மடத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு சித்தராமைய கேட்டுக் கொண்டுள்ளார் அதை நான் கண்டிப்பாக செய்து கொடுப்பேன்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் சித்தராமையாவினை, பாஜக எம்எல்ஏ ஒருவர் புகழ்ந்து பேசியது, அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…