மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா அதிமுகவிற்கு நான்தான் பொது செயலாளர் என கூறியுள்ளார்.
மயிலாடுதுறை அன்பகம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இரண்டு கைகள் இல்லாத லட்சுமி என்ற மாணவி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அவரை நேரில் சந்திக்க வருவதாக வி.கே. சசிகலா தெரிவித்திருந்தார். அதன்படி நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக பொதுச் செயலாளராக போட்டியிடுகிறீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு நான் ஏற்கனவே பொதுச்செயலாளர் தான் அவர்கள் தான் சண்டை போடுகிறார்கள் என்றார். மேலும் அதிமுக தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளது வேதனையாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…