South Africa Trending News :தென்னாபிரிக்காவில் பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்னாபிரிக்காவின் தெற்கு சூடான் பகுதியில் வசிக்கும் அடியு சாப்பிங் என்ற 45 வயதான பெண்ணை அதே பகுதியை சேர்ந்த ஆடு ஒன்று கொடூரமாக தாக்கியுள்ளது. அவர், சாலையில் நடந்து செல்லும் போது, பின்னால் வேகமாக ஓடி வந்த ஆடு அந்த பெண்ணை தாக்கி உள்ளது.
பெண் பலி
முதலில் தலையில் தாக்கிய ஆடு பின்னர் அந்த பெண்ணின் நெஞ்சில் வேகமாக தாக்கியது. இதில் அப்பெண்ணின் மார்பு பகுதியில் வேகமாக தாக்கியது. இச்சம்பவத்தில், அப்பெண்ணின் நெஞ்சு எலும்புகள் மொத்தமாக நொருங்கியதால் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புகார்
இதையடுத்து, அந்த பெண்ணின் உறவினர்கள் ஆட்டிற்கு எதிராக சூடான் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இந்நிலையில், இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் ஆட்டை பிடித்து காவல் நிலையத்தில் ஒரு கூண்டில் அடைத்து வைத்தனர். இது தொடர்பாக வழக்கு விசாரணையில் அந்த ஆட்டின் உரிமையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
3 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அந்த பெண்ணை ஆடு அடித்தே கொன்றதை அருகில் இருந்த மக்கள் உறுதி செய்துள்ளனர். மேலும் பலர் அந்த ஆட்டின் நடைமுறையை வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து, அந்த செம்மறி ஆட்டிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்டை ராணுவ சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…