கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள நாமநாடு பகுதியை சேர்ந்த மாணவர் நவநீதன் இவரை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் சாலை ஓரத்தில் விற்கப்பட்ட லகான் கோழி குஞ்சு ஒன்றை வாங்கி வளர்க்க தொடங்கியுள்ளார். அதற்கு சிவராமன் என பெயரும் வைத்துள்ளார்.
சிறு குஞ்சாக இருக்கும்போதே அந்த கோழி குஞ்சின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவந்துள்ளது. அத கவனித்த நவநீதன் அதற்கு சிறு பயிற்சிகள் அளிக்க தொடங்கியுள்ளார். தற்போது நன்றாக வளர்ந்துள்ள அந்த கோழி அவர் கொடுக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப சத்தமிடுவது, அவருடன் வாகனத்தில் பயணிப்பது என செய்துவந்துள்ளது.
இது குறித்து வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த சிவராமன் கோழியை மலையாள படத்திலும் நடிக்கவைத்துள்ளனர். இது குறித்த வீடியோ வெளியானதையடுத்து சிவராமன் இணையத்தை கலக்கி வருகிறது. மேலும் பல குறும்பட வாய்ப்புகளும் இந்த கோழிக்கு குவிந்துவருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…