பிரசித்தி பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு, 1997இல் அப்போது புதுச்சேரி முதல்வராக ஜானகிராமன் இருந்தபோது, தனியார் நிறுவனம் சார்பில் கோவிலுக்கு யானை வழங்கப்பட்டது. லட்சுமி என பெயர் சூட்டப்பட்ட அந்த யானை, தினமும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.
மேலும் பக்தர்கள் கொடுக்கும் பழம், அருகம்புல் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில், பக்தர்களிடம் லட்சுமி அமோக வரவேற்பை பெற்றது. புத்துணர்வு முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர, மற்ற அனைத்து நாட்களிலும், லட்சுமி தொடர்ச்சியாக கோவிலுக்கு வந்து ஆசி வழங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தது.
இந்நிலையில், லட்சுமி இன்று காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த லட்சுமி உயிரிழந்த சம்பவம், பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…