Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை..!

madhankumar July 20, 2022 & 09:35 [IST]
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை..!Representative Image.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இன்று (ஜூலை 20) அதிகாலை முதல், என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 67 பேர் உட்பட இஸ்ரேல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளி நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலருக்கு தண்டனை காலம் முடிந்த பின்னரும் விடுதலை வழங்கவில்லை என கூறி கடந்த மே 15 முதல் போராட்டங்கள் நடத்திவந்தனர். 

இதனை தொடர்ந்து சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் நடத்திய ஆய்வுக்கு பின்னர் கடந்த 2ம் தேதி, 16 பேர் சிறப்பு முகாம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் இன்று (ஜூலை 20) அதிகாலை, 4 மணி முதல் சென்னை, கொச்சின் போன்ற இடங்களில் இருந்து வந்த ஐ.ஜி. டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. தலைமையிலான என்.ஐ.ஏ. ( தேசிய பாதுகாப்பு முகமை) அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்