சென்னை: ஆவின் நிறுவனத்தில் கொள்முதல் செய்யப்படும் பால் 30 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆவின் நிறுவனத்தில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம். அவற்றை ஒவ்வொன்றாக சரிசெய்யப்படுகிறது. இங்குள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தினாலே தனியார் நிறுவனங்களில் சவால்களை எதிர்கொள்ள முடியும்.
ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 2லட்சம் கறவை மாடுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், கடந்த ஏப்ரல் மாதத்தில் 27லட்சமாக பால்கொள்முதல் தற்போது 30லட்சமாக அதிகரித்துள்ளது என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…