Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உழலை தடுக்க தீவிர கண்காணிப்பு - அமைச்சர் மூர்த்தி தகவல்...!

Baskarans Updated:
உழலை தடுக்க தீவிர கண்காணிப்பு - அமைச்சர் மூர்த்தி தகவல்...!Representative Image.

சேலம்: பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் வெளிப்படையாக செயல்படுவதற்கு திமுக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், குறிப்பாக ஊழலை தடுக்கவும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை சேலம் மண்டல அளவிலான அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில் பத்திரப்பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது,

பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் வெளிப்படையாக செயல்படுவதற்கு திமுக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.குறிப்பாக ஊழலை தடுக்கவும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் தற்போது ஆவணம் எழுதுவோர், இடைத்தரகர்கள் பத்திரபதிவு அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என பத்திரப்பதிவு துறை நெறிமுறைப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனை கண்காணிக்க மாவட்ட பதிவாளர்கள் திடீர் ஆய்வு ஈடுபட்டு  கண்காணிப்பை உறுதி செய்யவேண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் அமரமிடத்தில் ஆவணஎழுத்தர், இடைத்தரகர்கள் அமரக்கூடாது இது கண்டறியப்பட்டால் ஆவண எழுத்தரின் உரிமம் ரத்து செய்யப்படும்,சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை வழங்கி உள்ளார்.


மேலும் கண்காணிக்க தவறிய சார்பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தலைமை அலுவலகமான ஐஜி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊழலை தடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக பத்திரப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது இதனை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.புதிதாக தற்போது 3.0 ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பத்திரப்பதிவு துறை மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.

இதை தொடர்ந்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தவர்,கடந்த ஆட்சியில் வீரமணி அமைச்சராக இருந்தபோது, அதிகளவில் ஊழல் நடைபெற்றது.ஆனால் எந்த மண்டலத்திலும் ஆய்வு நடத்தவில்லை,எந்த அலுவலகத்திற்கும் சென்று கண்காணிக்கவில்லை, கடந்த ஆட்சியில் தான் அதிகளவில்  போலிபத்திரங்கள் பதிவானது. அதனை கண்டறிந்து, இந்திய குடியரசுத் தலைவரின் உத்தரவு பெற்று அதனை சரிசெய்து தரும்பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 2000 பேருக்கு சரி செய்து வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் நிலம் வாங்குபவர்கள்,விற்பவர்கள் பத்திரபதிவு அலுவலகத்திற்கு பணம் கொண்டு வர அவசியமில்லை, இணையதளம் மூலமாகவே செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளில் பத்திர பதிவுத்துறையில் ஊழலை தடுக்க பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு பத்திரபதிவு மூலமாக பத்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு நிலையில் தற்போது 17384 கோடியாக வருவாய் அதிகரித்துள்ளது. இதுவே கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் திமுக ஆட்சி சாதனை என்றும் பெருமிதம் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்