Corona Situation : இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா நிலவரம்
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தினசரி பாதிப்புகள் குறைந்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நிலவரப்படி கொரோனாவால் புதிதாக 3,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை இந்தியாவில் மொத்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4,31,85,049 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொர்ரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,24,708 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 2,513 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,33,365 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 26,976 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தடுப்பூசி நிலவரம்
இதனையடுத்து, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,96,169 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை 1,94,27,16,543 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…