அந்த காலத்தில் இருந்து தற்போது வரை தகவலை பரிமாற்ற பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில் அஞ்சல் துறையானது அதில் ஒரு அங்கமாக திகழ்ந்துவருகிறது.
இந்நிலையில் முதன்முறையாக ட்ரான் மூலம் பார்சல் அனுப்பும் சேவையை இந்திய அஞ்சல் துறை சோதித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்திய அஞ்சல் துறை, ஹபே என்ற கிராமத்தில் இருந்து நெர் என்ற கிராமத்திற்கு ட்ரோன் மூலம் மருத்துவம் சார்ந்த பார்சல் அனுப்பப்பட்டதாகவும், அது 25 நிமிடத்தில் 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை வெற்றியின் மூல எதிர்காலத்தில் டிரோன்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என நம்புகிறோம் என கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…