இந்தியாவின் முதல் சோலார் படகு கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாகவும், சுற்றுச்சூழல் பிரச்சனை காரணமாகவும் மத்திய மாநில அரசுகல் மின்சார வாகனங்களை ஊக்கிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக கேரளாவில், சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் படகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதித்யா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படகில் 75 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். 2014ம் ஆண்டு முதல் வடிவமைக்கப்பட்டு வந்த இந்தப் படகு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.3.5 கோடி. சோலார் முறையில் இயங்குவதால் ஆண்டுக்கு 58,000லிட்டர் டீசல் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…