உலக அளவிலான பொருளாதார மந்த நிலை காரணமாக இந்திய பங்கு சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் 1,400 புள்ளிகள், நிஃப்டி 414 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகியது. இதன்காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது.
சர்வதேச சந்தைகளின் தாக்கம் இந்திய பங்குசந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் சரிந்து 52,970 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 375 புள்ளிகள் சரிவுடன், 15,800 புள்ளிகளுடன் வர்த்தகம் துவங்கியது.
மேலும் இன்று ஆசிய மற்றும் ஐரோப்பிய ஆகிய நாடுகளின் நாணய மதிப்பு கடுமையாக சரிந்தது. இதனால் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ.78.36 ஆகியுள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகள் சரியாய் தொடங்கவே பலர் தங்களது பங்குகளை விற்க தொடங்கிவிட்டனர். இதனால் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…