ஆஸ்திரேலியாவில் 28 வயதான இந்திய மாணவர் ஒருவரை, பணம் கேட்டு தர மறுத்ததால் முகம், மார்பு மற்றும் வயிற்றில் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 6 ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 10:30 மணியளவில், சிட்னியில் பசிபிக் நெடுஞ்சாலையில் சுபம் கர்க் நடந்து சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக ஆஸ்திரேலியா போலீஸ் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 27 வயதான டேனியல் நார்வுட்டை போலீசார் கைது செய்துள்ளனர். கர்க்கின் மீது முகம், மார்பு மற்றும் வயிற்றில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து டேனியல் நார்வுட் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்திய மாணவரை தாக்கிய அவரை கைது செய்த போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துள்ளது. நார்வுட் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதை நீதிமன்றம் நிராகரித்து விட்டதால், தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…