தனியார் கேண்டீன் ஒன்றில் முட்டை கிரேவியில் அட்டை பூச்சி கிடந்த சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமங்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் பென்கள் சுய உதவிக்குழுக்களால் குடும்பஸ்ரீ என்ற கேண்டீன் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் அங்கு உணவு வாங்கியுள்ளார். அப்போது அவர் வாங்கிய முட்டை கிரேவியில் அட்டைப்பூச்சி இருப்பதைக்கண்டு அதிர்சியடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனைடிப்படையில் உணவகத்தில் சோதனை செய்த அதிகாரிகள் தரமற்ற உணவுகளை விற்பதாகவும் சுகாதரத்துறையினர் அனுமதி பெறாமல் உணவகம் நடத்தி வருவதாகவும் கூறி சீல் வைத்தனர்.இந்த உணவகத்தை நம்பி இருந்த நுற்றுக்காணக்கனவர்கள் தற்போது அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன், ஹோட்டல் ஒன்றில் வாங்கிய உணவு பார்சலில் பாம்பு ஒன்று இலவசமாக இருந்தது சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…