P.M.Wani : தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு 'பி.எம்.வாணி' திட்டத்தின் கீழ் மக்களுக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழக ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தி இணையதள சேவை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் உள்ள அணைத்து கார்டுதாரர்களின் முகவரிக்கு உட்பட்ட 2 கி.மீ துாரத்திற்குள் ரேஷன் கடைகள் அமைந்திருக்கிறது.
இந்நிலையில், பி.எம்.வாணி திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளை பொது தரவு மையமாக மாற்ற வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்து அறிக்கை தருமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அணைத்து ரேஷன் கடைகளிலும் 'வைபை' வசதி ஏற்படுத்தி, அந்த கடைக்கு அருகில் இருப்போருக்கு இணையதள சேவை வழங்கப்பட உள்ளது.
அதன்படி, அணைத்து பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடைகளிலும் மொபைல், லேப்டாப் மூலம் இணையதள சேவைகளை பயன்படுத்தலாம். மேலும், இந்த இணையதள சேவை பயன்படுத்து வேண்டுமென்றால் ரேஷன் கடைகளுக்கு தொகையை கட்டணம்m செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…